Friday, June 19, 2009

அன்றே மறுப்பின் இந்நிலை இன்றேது !

அன்றே மறுப்பின்
இந்நிலை இன்றேது !

நிஜம்போல் பழகி
நிழலாய் போனதேன் !
மணம்மிகு மல்லிகையும்
கற்றாழை பூவானதேன்!

வற்றாத நதிகளும்
வற்றிப்போகும் காலத்தில் ,
வற்றாமல் தடையுண்ட காவிரியாய்
நம் நட்பு மாறியதேனோ ?

இதனால்
கலங்கா என் மனம்
நொருங்கிப் போனதே !
அன்றே மறுப்பின்
இந்நிலை இன்றேது !

No comments:

Post a Comment