Friday, June 19, 2009

மயில்

வண்ணக் கோலமிட்டு
வானத்தில் வட்டமிட்டு
கண்களை கவர்திழுத்து
காண்போரை வியக்க வைத்து
சிலிர்க்கும் தோகை விரித்து
சிக்கென்று நடைபோட்டு
சிங்கார தலை கொண்டு
உலவ விட்ட இறைவன்
அனைத்திற்கும் மேலும்
காந்த குரலையும் வைத்து
திருஸ்டி கழித்தானோ?

No comments:

Post a Comment