Thursday, February 23, 2017

Seed my heart with love!
Feed my brain with peace!
Breed my thoughts with dream!
Creed my mind with wonders!
Deed my ears with rhythm!
But not least
Geed my eyes to close!
இமை மூட கண்கள் ஏங்க,
மனம் உறங்க உயிரும் ஏங்க,
தூக்கம் தொலைத்த இரவுகள்
என் வாழ்வில் தொடரத்தான் செய்கின்றன!!!

Friday, June 19, 2009

சில்லென்ற சோலையிலே
சிந்திக்கும் வேலையிலே
சிங்கார குரல் கேட்டதும்
சிட்டென மனம் விரிந்து
சிந்தனையில் விடுபட்டு
சிந்திக்க வைத்தாரோ ?

கருவண்ண நிறம் கொண்டு
காக்கையின் வழிவந்து - எனை
கரசி லையாக்கி

மயில்

வண்ணக் கோலமிட்டு
வானத்தில் வட்டமிட்டு
கண்களை கவர்திழுத்து
காண்போரை வியக்க வைத்து
சிலிர்க்கும் தோகை விரித்து
சிக்கென்று நடைபோட்டு
சிங்கார தலை கொண்டு
உலவ விட்ட இறைவன்
அனைத்திற்கும் மேலும்
காந்த குரலையும் வைத்து
திருஸ்டி கழித்தானோ?

ஆசை

வைரங்கள் மின்னும் நேரத்தில்
முத்துகள் உதிரும் நேரத்தில்
வெள்ளித்தட்டு மிதக்கும் நேரத்தில்
வழி தெரியா குயில் கூவும் நேரத்தில்
மென்தென்றல் வீசும் நேரத்தில்
அல்லி மலரும் நேரத்தில்
உலகம் உறங்கும் நேரத்தில்
நான் மட்டும் விழித்திருக்க ஆசை !

வானத்து வெண்நிலவு

வானத்து வெண்நிலவு
அதன் வட்டமான கட்டழகு !

வானத்து வெண்நிலவு
அது தவழ்ந்திடும் விதமழகு !

வானத்து வெண்நிலவு
அதன் குளிர் தரும் ஒளியழகு !

வானத்து வெண்நிலவு
அதன் அசைந்தாடும் நடையழகு !

வானத்து வெண்நிலவு
அதன் வியக்க வைக்கும அழகு
அழகோ அழகு !!!!!

காற்றின் வியர்வை

காற்றே ,
உனக்கு வியர்குமா என்றேன் .
ஆம் என்றது !
ஆதாரமாய் மழைத்துளிகளுடன் !!!!